வெள்ளி, 21 மார்ச், 2014

இங்கு வந்து பிறந்த பின்பே

இசைத்தட்டு: கரும்புலிகள்



இங்கு வந்து பிறந்த பின்பே
இருந்த இடம் தெரியும்
நாளை சென்று வீழும்
சேதி சொல்ல
இங்கெவரால் முடியும்
வாழ்க்கை என்னும் பயணம்
இதை மாற்றிடவா முடியும்

இங்கு வந்து பிறந்த பின்பே
இருந்த இடம் தெரியும்


பூமியிலே சாகும் தேதி
யாருக்கிங்கு தெரியும்
கரும்புலிளுக்கு மட்டும் தானே
போகும் தேதி புரியும்
சாமிகளும் வாழ்த்தி வீழும்
சரித்திரங்கள் இவர்கள்
தமிழ் சந்ததியில் அழியாத
சத்தியத்தின் சுவர்கள்
சத்தியத்தின் சுவர்கள்

இங்கு வந்து பிறந்த பின்பே
இருந்த இடம் தெரியும்


வாழ்வினிலே வசந்த காலம்
துறந்தவர்கள் சிலரே
--ம் வாசலிலே இளமை ராகம்
மறந்தவர்கள் சிலரே
கரும்புலிகள் விரும்பி இங்கு
இருப்பிழந்து போவார்
எங்கள் கண்ணெதிரே நின்ற பின்னர்
உருக்குலைந்து போவார்
உருக்குலைந்து போவார்

இங்கு வந்து பிறந்த பின்பே
இருந்த இடம் தெரியும்


தோளில் ஏற்றிப் போவதற்கு
நாலு பேர்கள் வேண்டும்
இந்த தோள்கள் இன்றி கரும்புலியை
தீயின் வாய்கள் தீண்டும்
வாழும் காலம் நீள்வதிலே
வந்திடுமா பெருமை
இல்லை வாய்கள் நூறு போற்றிப் பாட
சாவதுதான் பெருமை
சாவதுதான் பெருமை

இங்கு வந்து பிறந்த பின்பே
இருந்த இடம் தெரியும்


அச்சமின்றி குண்டடைத்து
ஆடிப்பாடிப் போவார்
எங்கள் அண்ணன் பெயர்
சொல்லிச் சொல்லி
கரும்புலிகள் சாவார்
சக்கை வண்டி தன்னில் ஏறி
சரித்திரங்கள் போவார்
வரும் சந்ததியின் வாழ்வுக்காக
தங்கள் உயிர் ஈவார்
தங்கள் உயிர் ஈவார்

இங்கு வந்து பிறந்த பின்பே
இருந்த இடம் தெரியும்

நாளை சென்றுவீழும் சேதி சொல்ல
இங்கெவரால் முடியும்
வாழ்க்கை என்னும் பயணம்
இதை மாற்றிடவா முடியும்
வாழ்க்கை என்னும் பயணம்
இதை மாற்றிடவா முடியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக