வெள்ளி, 21 மார்ச், 2014

பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்ற


பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது
பூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றது
பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது
பூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றது
ஆலமரம் வேர்களின்றி அலைகின்றது
அந்திமத்தில் யாரும் இன்றி அழுகின்றது

பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது
பூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றது
ஆலமரம் வேர்களின்றி அலைகின்றது
அந்திமத்தில் யாரும் இன்றி அழுகின்றது

ஆற்றினிலே நீருமில்லை
ஆதரிப்பார் யாருமில்லை
நேற்றிருந்த சொந்தமெல்லாம்
நேரினிலே இன்று இல்லை

ஆற்றினிலே நீருமில்லை
ஆதரிப்பார் யாருமில்லை
நேற்றிருந்த சொந்தமெல்லாம்
நேரினிலே இன்று இல்லை

பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது
பூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றது

நாய் வளர்த்துப் பாலை வார்த்தால்
வாளையாட்டிக் கொள்ளும்
நம்பிப் பெற்ற பிள்ளைகளோ
நன்றியினைக் கொல்லும்

நாய் வளர்த்துப் பாலை வார்த்தால்
வாளையாட்டிக் கொள்ளும்
நம்பிப் பெற்ற பிள்ளைகளோ
நன்றியினைக் கொல்லும்

கோவிலுண்டு பூசை செய்ய
யாருமிங்கு இல்லை
கொள்ளியிடக் கூட ஒரு
பிள்ளையிங்கு இல்லை

பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது
பூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றது

கட்டிலுக்கு வந்தவளும் என்னைவிட்டுப் போனாள்
தொட்டில் வந்த பிள்ளைகளோ தூரதேசம் போனார்
கட்டிலுக்கு வந்தவளும் என்னைவிட்டுப் போனாள்
தொட்டில் வந்த பிள்ளைகளோ தூரதேசம் போனார்

விட்டபடி சுத்துதடா
பூமியென்ற பந்து
இரத்தபாசம் என்பதெல்லாம்
இங்கு வெறும் பேச்சு

பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது
பூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றது
ஆலமரம் வேர்களின்றி அலைகின்றது
அந்திமத்தில் யாரும் இன்றி அழுகின்றது

ஆற்றினிலே நீருமில்லை
ஆதரிப்பார் யாருமில்லை
நேற்றிருந்த சொந்தமெல்லாம்
நேரினிலே இன்று இல்லை

ஆற்றினிலே நீருமில்லை
ஆதரிப்பார் யாருமில்லை
நேற்றிருந்த சொந்தமெல்லாம்
நேரினிலே இன்று இல்லை

பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது
பூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக