வெள்ளி, 21 மார்ச், 2014

ஈடுவைத்து ஈடுவைத்து நந்தலாலா

பாடல்வரிகள் - புதுவை இரத்தினதுரை.
இசையமைப்பு - முரளி. 


ஆனையிறவு வெற்றி கொள்ளப்பட்ட உவகையில் சாந்தன், சுகுமார் கூட்டில் வெளி வந்த பாடல். ஒருவித நையாண்டித் தன்மையோடு அமைந்த பாடல்.

ஈடுவைத்து ஈடுவைத்து நந்தலாலா -தமிழ்
ஈழம் தரப்போகிறாவே நந்தலாலா
ஆடும்வரை ஆடிவிட்டா நந்தலாலா -இப்போ
ஆனையிறவு எங்களிடம் நந்தலாலா

எந்த மாதிரி அட அந்தமாதிரி
எந்த மாதிரி அட அந்தமாதிரி -தமிழ்
ஈழமெங்கள் கண்ணெதிரே வந்தமாதிரி
சொந்த ஊரிலேறி நாங்கள் சென்ற மாதிரி -எதோ
தேவதைகள் வந்து வரம் தந்தமாதிரி
இந்தமாதிரி வாசம் வீசும் மாதிரி -அட
சந்தனத்தை பூசிக்கொண்டு நின்ற மாதிரி

ஊருக்குள்ளே போகப்போறோம் நந்தலாலா -இப்போ
உள்ளதையும் தந்து போறா நந்தலாலா
மாமனையே நம்பி நம்பி நந்தலாலா -இப்ப
மாரடிச்சுக் கொள்ளிறாவாம் நந்தலாலா

அம்பகாமம் வந்து போனார் நந்தலாலா -இப்போ
ஆட்டிலறி தந்து போனார் நந்தலாலா
அம்மையாரே தந்துபோவார் நந்தலாலா -எங்கள்
அம்பாறையும் வந்துதவும் நந்தலாலா

இந்தியாவுக் கோடிப்போனா நந்தலாலா -இப்போ
இஸ்ரவேலுக்கு ஓடுறாவாம் நந்தலாலா
எங்கு ஓடிப்போயும் என்ன நந்தலாலா -எங்கள்
தம்பி தானே வெல்லப்போறான் நந்தலாலா

ஈடுவைத்து ஈடுவைத்து நந்தலாலா -தமிழ்
ஈழம் தரப்போகிறாவே நந்தலாலா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக